ராப்டீ தனது நிறுவனத்துக்குள்ளேயே பாகங்களை தயாரித்து அம்பத்தூர் மற்றும் திருமழிசையின் சிட்கோ தொழிற் பேட்டையில் இருக்கும் சிறு சிறு நிறுவனங்களிடம் தனது உற்பத்தி வேலைகளை புறமூலாக்கம் (outsource) செய்கிறது. பின்னர் உற்பத்தியான பாகங்களை கொண்டு வந்து அதனிடத்தில் வைத்து பொருத்துகின்றது. மேலும் இந்த துளிர் நிறுவனமானது தனது உற்பத்தியை விரிவாக்க முப்பத்து ஆறு ஏக்கர் அளவிலான நிலத்தினை கையகப்படுத்துவதற்கான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU)  தமிழ்நாடு அரசுடன் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சந்தையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் மாநில அரசின் பெருமளவு ஆதரவு பெற்றதோடு அதன் விளைவாக உதவித் தொகை பெறவும் துவங்கியுள்ளது இந்நிறுவனம். இந்த ஆண்டு இறுதியில் தங்களின் மின்சார இரு சக்கர வாகனத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்தப் போகும் ராப்டீ எனர்ஜி நிறுவனமானது இந்தியாவின் தானுந்து ஆராய்ச்சி கழகத்திடமிருந்தும் (ARAI – Automotive Research Association of India) மத்திய அரசிடமிருந்தும் உதவித் தொகையைப் பெற்றுள்ளது. “இரண்டாம் முறை உதவித் தொகை பெறுவதே எங்களுக்கு நெருக்கடியாக இருக்கிறது. நாங்கள் நினைத்தது போல வாகன உற்பத்தி என்பது அவ்வளவு எளிதாக இல்லை,” என அவர் மென்மையாகச் சிரிக்கிறார்.

வாகனம் வெளிவரப் போகும் நாளில் இருந்து மூன்று மாதங்கள் வரை தற்பொழுது எங்களுக்கு முன்பதிவுகள் இருக்கின்றன. வாகனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு இந்த பதிவுகள் அதிகரிக்கும் என நம்புகிறார் இந்த இளம் தொழில்முனைவோர். முதல் கட்டத்தில் ஓராண்டு கால அளவிற்கு குறைந்த அளவேயான பத்தாயிரம் இரு சக்கர வாகனங்களே உற்பத்தி செய்யப்படும். ஆரம்பத்தில் சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களிலும் அதன் சுற்று வட்டரங்களிலுமே இந்த வண்டிகள் விநியோகம் செய்யப்படும். உற்பத்தி துவங்கி பதினெட்டு மாதங்கள் கழித்து ராப்டீ மின்சார இரு சக்கர வாகனங்கள் இந்தியா எங்கிலும் விற்பனை செய்யப்படும்.

மின்சார வாகனங்களை குறிப்பாக அண்மைக் காலத்தில் மின்சார வாகனங்களில் இருக்கும் மின்கலங்கள் தீப்பற்றி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகமாக வலம் வரும் வேளையில் இந்தியாவில் இன்றளவும் மக்கள் பயத்துடனும் சந்தேகத்துடனுமே அவற்றை காண்கின்றனர். “ஒரு சில வாகனங்கள் நடைமுறையில் ஏன் தோல்வியடைகின்றன என்பதை மக்கள் புரிந்துக் கொள்கின்றனர். என்னதான் இது போன்ற செய்திகள் வலம் வந்தாலும் ஒரு சில ஆலைகள் நம்பகமான தரம் வாய்ந்த வாகனங்களையே உற்பத்தி செய்யும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்,” என அவர் கூறுகிறார். “எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் நீங்கள் விலை பொருட்களை உற்பத்தி செய்யலாம். அதற்கென ஓர் வாடிக்கையாளர் கூட்டம் எப்பொழுதுமே இருக்கும் என்பதே இந்திய சந்தையின் சிறப்பம்சம் ஆகும். நீங்கள் தயாரிக்கும் பொருளை சந்தையில் நெடுங்காலம் தக்க வைப்பதே முக்கியமான ஒன்றாகும்” என நிறைவு செய்கிறார் தினேஷ்.