மக்களின் மனங்களில் சுற்றி வந்த உளச்சிகிச்சை (therapy) குறித்த ஒரு களங்கம் (stigma) மெதுவாக விலகத் தொடங்கி வருகிறது. பெpருந்தொற்று ஆரம்பித்த நாட்களில் இருந்தே இளம்வயதினர், மனநலத்தில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். எனினும் சென்னையில் வெறும் 21 உளச்சிகிச்சை மையங்களே இருக்கின்றன. ஒட்டுமொத்த 138 கோடி இந்திய மக்கள் தொகைக்கும் வெறும் 5000 மையங்களே இந்தியா முழுவதும் இருக்கின்றன. இந்த மையங்களில் ஒன்றான நிகிதா ரைசிங்கனி (Nikita Raisinghani) என்பவரால் நடத்தப்படும் ஹொரைசன் உளச்சிகிச்சை மையம் (Horizon Therapy Centre) என்பது படைப்பாற்றல் கலைகளான (creative arts) இசை, நாடகம், நடனம் போன்ற கலைகள் மூலம் குழந்தைகள், பதின்ம வயதினர் (adolescents) மற்றும் பெரியோர்களுக்கு, சுய புரிதலில் பெரிதும் உதவி வருகிறது. “படைப்புத்திறன் செயல்களுக்கு ஒரு விரிவான அமைப்புமுறை தேவை என்ற ஒரு தவறான புரிதல் பொதுவாக உள்ளது. படைப்புத்திறனின் எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு இம்மையத்தை நாங்கள் வடிவமைத்தாலும் கூட, மக்கள் உணராதது என்னவென்றால், அசைவுகள் செய்வது (movement), எழுத்துகள் எழுதுவது, ஏன் ஒரு வெற்றுத் தாளில் கிறுக்குவது போன்ற மிக எளிய செயல்களும் படைப்புத்திறன் உளச்சிகிச்சை (creative therapy) தான் என்பதே.”

உளச்சிகிச்சையில் நிகிதா முழுமூச்சாக இறங்க அவரைத் தூண்டியது என்ன? மகளிருக்கான எம். ஓ. பி வைஷ்ணவ் கல்லூரியில் தன் இளங்கலைப் படிப்பில் சமூகவியலை (sociology) அவர் தேர்வு செய்தார். இந்தக் காலக்கட்டத்திலேயே உளவியல் (psychology) என்ற பாடப் பிரிவுக்கு அவர் அறிமுகமானார். “என் மனமானது, இதுவே எனக்கு ஏற்ற வாழ்க்கைப் பணி என்பதனை எனக்கு உணர்த்தியது,” என மிகுந்த ஆர்வத்துடன் கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில் (Monash University) உளவியல் ஆலோசனை (counselling) படிப்பில் சேர்ந்து அதில் பட்டம் பெற்றார். இந்த காலக்கட்டத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிக் கல்வி (internship) மேற்கொண்ட அவர், சமூக…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.