“ஆசிரியர்களுக்கு மின்சார வண்டிகள் தருகின்ற பள்ளிக்கூடம் என்றே அனைவரும் எங்களை குறிப்பிடுவதுண்டு!” என சிரித்துக் கொண்டே நம்முடன் உரையாடத் துவங்குகிறார் அமீகா அகாடமியின் (Amyga Academy) நிறுவனர் லக்ஷ்மி ராமமூர்த்தி (Lakshmi Ramamurthy). இந்தியா எங்கிலும் இருக்கும் குக்கிராமங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை எடுத்து செல்வதோடு அங்குள்ள அங்கன்வாடிகள் எனப்படும் பள்ளிக்கூடங்கள் இயங்குவதற்கு பங்களித்து வரும் கிராமப்புற மகளிரை தற்சார்பாக மாற்றியும் வருகிறது இந்த பயிற்சி நிறுவனம்.
பெங்களூரில் பட்டயக் கணக்கர் (Chartered Accountant) ஆக துவங்கியது லக்ஷ்மியின் பணி வாழ்க்கை. அவர் பணியின் முதல் பத்து ஆண்டுகள் முழுவதும் நிதியை சம்பந்தப்படுத்தியே இருந்ததே தவிர கல்வியை சார்ந்து ஒன்றுமே இருக்கவில்லை. “இன்றளவும் அது ஓர் விந்தையாகவே இருக்கிறது,” என தொலைவில் பார்த்தவாறே நினைவுக்கூறும் அவர் தொடர்ந்து, “எவ்வாறு நான் நிதித் துறையில் இருந்து கல்வித் துறைக்கு மாறினேன் என்பது,” என சிரிப்புடன் கூறுகிறார்.

கேப்ஜெமினி (Capgemni) எனும் நிறுவனத்தில் நிதி மற்றும் கணக்கு வைப்பு பிரிவில் இயக்கப்பணி ஒன்றுக்கு விண்ணப்பித்து இருந்தார் நமது பட்டயக் கணக்கரான லக்ஷ்மி. வேலைக்கான நேர்காணலில் தனது தற்குறிப்பால் (resume) பெரிதும் கவரப்பட்ட மனிதவளத் துறை அதிகாரி (HR) ஒருவரால் வரவேற்கப்பட்டார் லக்ஷ்மி. எனினும் இவருக்கான தகுந்த வேலையிடம் இல்லை என்பதை அந்த அதிகாரி இவரிடம் தெரிவித்தார்.
“நான் விடைபெறுவதற்காக எழுந்து நின்று அவரோடு கை குலுக்கும்போது அந்த அதிகாரி ஏதோ சொல்லிக் கொண்டே திடீரென பாதிலேயே அதனை நிறுத்தினார்,” என நினைவுக் கூறும் லக்ஷ்மி, “நிதி மற்றும் கணக்கு வைப்பு பயிற்சி துறையை முன்னெடுத்து இயக்குவதற்கு தீவிரமாக அவர்கள் ஒருவரை தேடி வருவதாக தெரிவித்தார் அந்த அதிகாரி.” அந்த வேலையின் விவரங்கள் அவரின் ஆர்வத்தைத் தூண்டின. தானாகவே ஓர் குழுவை உருவாக்கி அதனை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது அவருக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. எனவே, அங்கேயே…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.