சாலையின் நடுவில் ஓர் பசு மாடு நின்றுக் கொண்டு இருந்தது. நகர சூழலுக்கு முற்றிலும் ஒத்துப் போகாத வகையில் மேய்ந்துக் கொண்டிருக்கும் பல மாடுகளைப் போல இது இல்லை. இது ஏதோ சிரமத்தில் இருப்பது போல தெரிந்தது. அந்த மாட்டிற்கு இருக்கும் பிரச்சனையை சற்று கூர்ந்து கவனிக்க தீபேஷ் பாஸ்கர் (Deepesh Bhaskar) தான் அமர்ந்து இருந்த வாடகைச் சீருந்தினை (cab) நிறுத்தச் சொல்லி அதன் ஓட்டுநரை கேட்டுக் கொண்டார். வண்டிகள் அங்கும் இங்கும் அந்த மாட்டினை சுற்றி செல்ல அந்த மாடோ மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டு செய்வதறியாது தவித்துக் கொண்டு இருந்தது. தீபேஷ் உடனடியாக அங்கிருக்கும் கடைகளில் அந்த மாட்டின் உரிமையாளரைப் பற்றி விசாரித்தார்.
அப்பொழுது மாட்டுச் சாணம் கரைத்த தண்ணீரைக் கொண்ட ஓர் வாளியை கையில் எடுத்துக் கொண்டு ஓர் பெண்மணி அங்கு வந்தார். அதனைக் குடித்த அந்த மாடு வாந்தி எடுக்க அதன் வயிற்றில் இருந்து ஓர் மீட்டர் நீள அளவிலான நெகிழி (plastic) வெளியே வந்தது. “அந்த மாடு உயிரிழந்தது. அதனை எங்களால் காப்பாற்ற முடியவில்லை,” என வருத்தத்துடன் கூறுகிறார் தீபேஷ். இந்த நிகழ்வே தனது பெருநிறுவன வேலையை விட்டுவிட்டு கழிவினை குறைக்கும் நோக்கம் கொண்ட நிலயான் (Nilayaan) எனும் விலைபொருள் நிறுவனம் ஒன்றினை நிறுவுவதற்கு தீபேஷுக்கு தூண்டுகோலாக இருந்தது.

“சென்னை சமூகப் பணி பள்ளியில் (MSSW – Madras School of Social Work) நான் பயின்றேன்,” என்கிறார் தீபேஷ். கல்லூரி முடிந்த உடனேயே வெளிநாட்டில் பயில்வதற்கான திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்யும் பணியில் சேர்ந்து அப்பணியில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளித்தும் அறிவுரைகள் வழங்கியும் வந்தார் அவர். “அப்பொழுது இளம் திறன்களை இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழிலில் நானும் ஓர் அங்கம் வகித்தேன் என்பதை சிந்தித்து பார்த்தால் தற்பொழுது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறைக்கு என்னவோ அது முரணாகவே உள்ளது,”…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.