“ஒரு நாள் நான் சின்ன பையனா இருக்க அப்போ—ஏழாம் வகுப்புல இருந்துருப்பேனு நினைக்குறேன், என் அம்மாவோட நண்பரின் அலுவலகத்துக்குப் போயிருந்தேன்,” என நினைவுக் கூறும் யுவன் ஏவ்ஸ் (Yuvan Aves), “நான் பெரியவனா ஆன அப்புறம் என்னவாக ஆசைபட்றேனு அங்க இருந்த யாரோ என்கிட்ட கேட்டாங்க.”
“இயற்கையியலர் (naturalist) ஆகப் போறேன்!” என ஆர்வத்துடன் பதில் கூறிய அந்த சிறுவனைப் பார்த்து அனைவரும் ஏளனமாகச் சிரிக்கத் துவங்கினர். காரணம்—அது போன்ற பணிகளில் போதுமான சம்பளம் கிடைக்காது என்ற பொதுவான பிம்பத்தினால். ஒருபுறம் இந்த சிரிப்பு சத்தம் தனது காதுகளை துளைக்குமாறு இருக்க, மறுபுறம் சிறுவனாக இருந்த யுவன் ஆழ்ந்த சிந்தனையில் தொலைந்துப் போனார். “இயற்கையியலர் ஆகனும்ங்கற என் ஆசையில சிரிக்குறதுக்கு என்ன இருக்கு?” என சிந்திக்கலானார் யுவன்.
தனது பதினாறு வயதில், வழக்கம் போல பள்ளி சென்று கற்கும் முறையானது தனக்கு ஒத்து வராது என்பதை முடிவு செய்தார் யுவன். தனது பள்ளியை விட்டு நின்ற அவர், செங்கல்பட்டில் உறைவிடப் பள்ளி (residential school) ஒன்றில் பணியில் இருந்தவாறு, தொலைதூரக் கல்வி பயிலும் முறையின் மூலம் A-லெவல் (A-levels) தகுதி சான்றிதழையும் (A-லெவல் தகுதி சான்றிதழ் என்பது விருப்பப் பாடங்களை தேர்வு செய்து படித்து பள்ளிக்கல்வி முடித்ததற்கான தகுதி சான்றிதழாக ஐக்கிய பேரரசின் கல்வி குழுமங்களால் வழங்கப்படுவது) கல்லூரிப் படிப்பையும் மேற்கொண்டார். தான் வேலைப் பார்க்கும் இடத்தின் அருகாமையில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கென, ஓர் ஆலோசனை வகுத்து வைத்திருந்தார். “நெல் மணிகள் வளரும் வயல்களைச் சுற்றி கற்றலை வளர்க்கும் விதமாக உங்கள் மாணவர்களை நடைப்பயணம் அழைத்து செல்லப் போகிறேன்,” என தன்னம்பிக்கையுடன் அந்த ஆசிரியர்களிடம் முன்மொழிந்தார் அவர்.

இளம் இயற்கையியலர் ஆன நம் யுவன், தனது மாற்றுக் கல்வி முறையின் மூலம் மாணவர்கள் நிச்சயமாக முன்பை விட அதிக மதிப்பெண்கள் எடுப்பர் என்று ஆசிரியர்களிடம் உறுதியளித்தார். “குழந்தைகள் அதிகப்படியாக…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.